Connect with us

Hi, what are you looking for?

கட்டுரைகள்

உண்மை சொல்லு கண்ணே

வள்ளுவம் படிக்கப் படிக்கவும், தேடித் தேடி உரைகளைப் படித்தும்அறிஞர் பேச்சுக்களைக் கேட்டும்ஒவ்வொரு முறையும் தனித்துவம்கொண்டு புதுமையாகவே நிற்கிறது.

நட்பு, உழவு என்ற வரிசையில் குறிப்பறிதல் என்ற தலைப்பை மட்டும் இருமுறை பயன்படுத்தியுள்ளார். இன்பத்துப்பாலில் இடம்பெற்றதன் விளக்கம் தேவையில்லை.பொருட்பாலில் குறிப்பறிதல் இருப்பதுதான் சிறப்பு.

நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணும்கால் கண்
அல்லது இல்லை பிற. (710)

பொருள்

நுண்மையான அறிவு உடையவரும், பிறருடைய உள்ளத்து உண்மையை அளந்து அறிந்து கொள்ள உதவும் கருவி கண் ஆகும்.

இதை நாம் உணர்ந்திருக்கலாம் அல்லது பிறர் சொல்லக கேட்டிருக்கலாம். உள்ளுணர்வு சொல்லும் என்கிறோமே, அப்படித்தான்.

பார்த்ததுமே நினைச்சேன்,
ஒருதடவை பார்த்தா சொல்லிருவேன்,
கண்ணுல பார்த்தாலே சொல்லிரலாம் …
கண்ணாலயே அளந்துருவா,
இப்படி நிறையக் கேட்டிருப்போம்.

ஒரு உறவின் பயணத்தைத் தீ்ர்மானிப்பதும், முடித்து வைப்பதும் கண்களின் பொறுப்பில் உள்ளது. கண்கள் காதலுக்கு மட்டுமே அணிகலன் எனப் பாடப்பட்டதை மட்டுமே அறிந்த நமக்கு, வள்ளுவன் தந்த இந்தக் குறள் புதுச்சிறப்புச் சேர்க்கிறது கண்களுக்கு…அந்தக் குறிப்பினைத்தான் குறிப்பிடுகிறார் குறிப்பறிதல் அதிகாரத்தில்.

கண்கள் காதலை மட்டுமல்ல
உள்ளத்து உண்மையும் கண்டறியும்

#கண்கள் இரண்டும்

-சித்ரா மகேஷ்

Advertisement

Trending

சங்க இலக்கியம்

திருக்குறள்

You May Also Like

கவிதைகள்

அம்மா வெறும் சொல்லல்ல. நாள்களில் என்ன இருக்கின்றதுஅம்மாவைக் கொண்டாட. எந்நாளும் தன்னலம் பார்க்காததிண்மையின் […]

சங்க இலக்கியம்

   ‘சங்கம் மொழிந்த காதல்’ –   காதல் 2 உலகில் யாருக்கெல்லாம் கொடுத்து […]

திருக்குறள்

மதியாதவர் உதவியில் உயிர் வாழ்வதைவிட இறப்பதே நன்று. தன்னை மரியாதை இல்லாமல் நடத்துபவர் […]

திருக்குறள்

கேலி பேச வேண்டாம் தோற்றம் குறை அல்ல தேரின் அச்சாணி சிறிது. பெரிய […]

திருக்குறள்

கனவிலும் துன்பம் தரும்சொல் வேறு செயல் வேறுஉடையவர் நட்பு. கனவில் கூடத் துன்பம் […]

சங்க இலக்கியம்

‘சங்கம் மொழிந்த காதல்’ – காதல் 3 சுற்றியிருக்கும் உறவுகளோடுதான் மனிதவாழ்வின் அன்றாட […]

சங்க இலக்கியம்

‘சங்கம் மொழிந்த காதல்’ – காதல் 5 மனிதனின் கண்டுபிடிப்புகளில் சிறந்த ஒன்று […]

சங்க இலக்கியம்

நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறுஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்கற்று அறிந்தார் ஏத்தும் கலியொடு […]

சங்க இலக்கியம்

‘சங்கம் மொழிந்த காதல்’ –   காதல் 1 நீண்டவழிப் பயணத்திற்காக வழி நெடுகச் […]

Advertisement